Thursday, 4 June 2020

பட்டினத்தார் - முதல்வன் முறையீடு, ( 3 )

பட்டினத்தார் பாடல்கள் 

முதல்வன் முறையீடு ( 3 )




கட்டுவர்கத்து ஆசை 
கழலேனே என்குதே 
செட்டுதனில் ஆசை 
சிதையேனே என்குதே !

மாற்றும் சலவை 
மறக்கேனே என்குதே 
சோற்றுக்குழியும் இன்னும்
தூரேனே என்குதே ! 

ஐந்து புலனும் 
அடங்கேனே என்குதே 
சிந்தைத் தவிக்கிறதும்
தேறேனே என்குதே !

காமக் குரோதம்
கடக்கேனே என்குதே 
நாமே அரசென்று 
நாள்தோறும் எண்ணுதே !!

கன்னி வன நாதா...
கன்னி வன நாதா... !!!





( இன்னும் வரும் )


No comments:

Post a Comment