Monday, 15 June 2020

பட்டினத்தார் - முதல்வன் முறையீடு ( 15 )

பட்டினத்தார் பாடல்கள் 

முதல்வன் முறையீடு ( 15 )


சரக்கொன்றைப் பூத்த 
சடைக் காட்டைப் பாரேனோ....
எருக்கு அறுகு ஊமத்தை அணி
ஏகாந்தம் பாரேனோ.....??

கொக்கிறகு கூடி நின்ற 
கொண்டாட்டம் பாரேனோ....
அக்கினியை ஏந்தி நிற்கும் 
ஆனந்தம் பாரேனோ..... ??

தூக்கிய காலும்
துடி இடையும் பாரேணோ........
தாக்கு முயலகன் மேல் 
தாண்டவத்தைப் பாரேனோ ...??

வீசு கரமும் 
விகசிதமும் பாரேனோ.....
ஆசை அழிக்கும்
அபய கரம் பாரேனோ ... ??

கன்னி வன நாதா....
கன்னி வன நாதா ........

இன்னும் வரும்.....


No comments:

Post a Comment