Sunday, 24 May 2020

பட்டினத்தார் - பூரண மாலை ( 10 )

பட்டினத்தார்  பாடல்கள்

பூரணமாலை ( 10 )


பூசையுடன் புவன
    போகமெனும் போக்கியத்தால்
ஆசையுற்றே நானும்
    அறிவழிந்தேன் .................... பூரணமே !  91

படைத்தும் அழித்திடுவாய்
    பார்க்கில் பிரமா எழுத்தைத்
துடைத்துச் சிரஞ்சீயாய்த்
    துலங்குவிப்பாய்................... பூரணமே !   92

மந்திரமாய்ச் சாத்திரமாய்
     மறை நான்காய் நீயிருந்த
தந்திரத்தை  நானறியத்
தகுமோதான்  .........................   பூரணமே !   93

அல்லாய்ப் பகலாய் 
    அனவரத  காலமெனும்
சொல்லாய்ப் பகுத்த
    தொடர்பறியேன் ..............   பூரணமே !   94

நரகம் சுவர்கமென
    நண்ணும் இயரண்டு உண்டாயும்
அரகரா என்பது
அறிகிலேன்  ...........................  பூரணமே !   95

பாவ புண்ணியனென்னும்
     பகுப்பாய் படைத்திங்கு
ஆவலை உண்டாக்கி வைத்த
    அருளறியேன் ...................... பூரணமே !   96

சாந்தமென்றும் கோபமென்றும்
    சாதி பேதங்களென்றும்
பாந்தாமென்றும் புத்தியென்றும்
     படைத்தனையே .................  பூரணமே !  97

பாசம் உடலாய்
     பசு அதுவும் தானுயிராய்
நேசமுடன் நீ பொருளாய்
    நின்றனையே .....................  பூரணமே !  98

ஏதிலடியார் இங்கு
     இயக்கத்தினில் வந்துன்றன்
பாதமதில் தாழப்
    பரிந்தருள்வாய்  .................  பூரணமே !  99

நானே நீ  நீயே நான்
    நாமிரண்டும் ஒன்றானால்
தேனின் ருசியதுபோல்
   தெவிட்டாய் நீ  ....................  பூரணமே !   100

முடிவில் ஒரு சூனியத்தை
    முடித்து நின்று பாராமல்
அடியில் ஒரு சூனியத்தில்
    அலைந்தேனே  ..............      பூரணமே !  101

பூரண மாலை தன்னைப்
    புத்தியுடன் ஓதினோர்க்குத்
தாரணியில் ஞானம்
    தழைப்பிபாய் ....................... பூரணமே !   102


பூரண மாலை  முற்றிற்று !




ஹரி ஓம் !!!


 


    

Saturday, 23 May 2020

பட்டினத்தார் - முதல்வன் முறையீடு, ( 2 )

பட்டினத்தார் பாடல்கள் 

முதல்வன் முறையீடு ( 2 )



மண்ணாசைப் பட்டேனை
மண்ணுண்டு போட்டதடா ... 
பொன்னாசைப் பெண்ணாசைப் 
போகேனே  என்குதே  ! 

மக்கள் சுற்றத்தாசை 
மறக்கேனே என்குதே! 
திக்கரசாம் ஆசையது 
தீரேனே என்குதே !

வித்தை கற்கும் ஆசையது
விட்டொழியேன் என்குதே... 
சித்து கற்கும் ஆசையது ...
சிதையேனே  என்குதே !

மந்திரத்தைல் ஆசை 
மறக்கேனே  என்குதே ! 
சுந்தரத்தில் ஆசை 
துறக்கேனே என்குதே !

கன்னி வன நாதா !
கன்னி வன நாதா  !! 


இன்னும் வரும் !


பட்டினத்தார் - முதல்வன் முறையீடு ( 1 )

பட்டினத்தார் பாடல்கள் 

முதல்வன் முறையீடு ( 1 )




மூலம் அறியேன் 
முடியும் முடிவறியேன்....
ஞாலத்துள் பட்ட துயர்
நாட  நடக்குதடா  !

அறியாமையாம் மலத்தால் 
அறிவு முதல் கெட்டனடா... 
பிரியா வினைப் பயனால்
பித்து  பிடித்தனடா   !

தனுவாகிய நான்கும் 
தானாய் மயங்கினண்டா  ..
மனுவாதி சத்தி வலையில்
அகப்பட்டனடா ..... !

மாமாயை என்னும் 
வனத்தில் அலைகிறண்டா..
தாமாய் உலகனைத்தும் 
தாது கலங்கிறன்டா  .....  !

கன்னி வன நாதா !
கன்னி வன நாதா  !!               



இன்னும் வரும்... !



பட்டினத்தார் - பூரண மாலை ( 9 )

பட்டினத்தார்  பாடல்கள்


பூரண மாலை ( 9 )



நகாரம் மகாரம் என்பார் 
   நடுவே  சிகாரம் என்பார் 
வகாரம் யகாரம் என்பார் 
   வகையறியார்  ...................  பூரணமே !  81

மகத்துவமாய் காம
   மயக்கத்துக்குள் இருந்து 
பகுத்தறிய மாட்டாமல் 
   பயன் அழிந்தேன் .................பூரணமே !   82

உண்மைப் பொருளை 
   உகத்திருந்து பாராமல் 
பெண் மயக்கத்தாலே 
பிறந்து இறந்தேன் ..................பூரணமே !   83

வாயார வாழ்த்தி
    மகிழ்ந்து உனைத்தான்  போற்றாமல்
அந்தரமாய் நின்று 
   அலைந்தேன் ........................  பூரணமே !   84

சந்திரனை மேகமதுதான் 
  மறைத்த வாறதுபோல் 
பந்தமுடன் யானும் உனைப்
பார்க்கிலேன் ............................  பூரணமே !   85

செந்தாமரைத் தாளை 
   தினந்தினமும் போற்றாமல்
அந்தரமாய் நின்று அங்கு  
   அலைந்தேன்  ......................   பூரணமே !   86

நீர்மேல்  குமிழிபோல்
    நிலையற்ற  காயமிதை 
தாரகம் என்று எண்ணி நான்
   தட்டழிந்தேன் ....................   பூரணமே !   87

நெஞ்சம் உருகி நினைந்து 
    உனைத்தான் போற்றி
நெடு வஞ்சகத்தைப் போக்க
வகை அறியேன் .................... பூரணமே !   88

எள்ளுக்குள் எண்ணெய் போல்
   எங்கும் நிறைந்திருந்தது
உள்ளம் அறியாது 
   உருகினேன்  .......................  பூரணமே !   89

மாயாப் பிரபஞ்ச
   மயக்கத்திலே விழுந்த 
ஓயாச் ச(ஜ)னனம் 
    ஒழித்திலேன்   .................  பூரணமே  !  90



   தொடரும் !!

Friday, 22 May 2020

பட்டினத்தார் - பூரண மாலை ( 8 )

பட்டினத்தார்  பாடல்கள் 

பூரண மாலை ( 8 ) 



உருப் பேதமின்றி 
   உயர்ந்த சப்த பேதமாய்க்
குருப் பேதமாய் வந்த 
   குணம் அறியேன் .....................................  பூரணமே !   71

சட் சமய பேதங்கள் 
   தான் வகுத்துப் பின்னுமொரு
உட் சமயம் உண்டென்று
   உரைத்தனையே ........................................பூரணமே !   72

முப்பத்து இரண்டு உறுப்பாய் 
   நுனைந்து படைத்து உள்ளிருந்த
செப்படி வித்தைத் 
   திறமறியேன் ............................................  பூரணமே !   73

என்னதான்  கற்றாலென் ?
   எப்பொருமும் பெற்றாலென் ?
உன்னை அறியாதார்
   உய்வாரோ ?  ............................................ பூரணமே !   74

கற்றறிவோம்  என்பார் 
   காணார்கள்  உன் பதத்தை ! 
பெற்றறியார் தங்களுக்கு 
   பிறப்பறுமோ ........................................     பூரணமே !  75

வான் என்பார் அண்டமென்பார்
    வாய் ஞானமே பேசி 
தான் என்பார் வீணர்
   தனை அறியார்..... ................................    பூரணமே !   76

ஆதி என்பார்  அந்தமென்பார் 
   அதற்குள் நடுவாயிருந்த 
சோதி என்பார் நாதத்
தொழில் அறியார் ....................................   பூரணமே !   77

மூச்சென்பார் உள்ளமென்பார்
   மோனமெனும் மோட்சமென்பார்
பேச்சென்பார் உன்னுடைய 
    பேரறியார்  ...............................................  பூரணமே !   78

பரமென்பார்  பானுவென்பார் 
    பாழ்வெளியாய் நின்ற 
வரமென்பார்  உந்தன்
    வழியறியார்  ...................................           பூரணமே !  79

எத்தனை பேரோ எடுத்தெடுத்து
   தான் உரைத்தார்
அத்தனைப் பேர்க்கு ஒன்றானது
   அறிகிலேன்  .....................................          பூரணமே !  80 




தொடரும் ..........
 

Thursday, 21 May 2020

பட்டினத்தார் - பூரண மாலை ( 7 )

பட்டினத்தார் பாடல்கள்

பூரண மாலை



வானில் கதிர்மதியாய் வளர்ந்து
   பின் ஒன்றானது போல்
ஊன் உடலுக்குள் இருந்த
   உயிர்ப்பு அறியேன்......................பூரணமே !   61

பொய்யும் புலையும் மிகப் பொருந்தி
   வீண் பேசல் அன்றி
ஐயோ உனை உறைக்க
   அறிகிலேன் ..................................பூரணமே !    62

நிரந்தரமாய் என்றும்
    நின்று விளையாடினதைப்
பரம் அதுவே என்னப்
   பதமறியேன் ...................................பூரணமே !   63

கொல்வாய்  பிறப்பிப்பாய்
   கூட இருந்தே சுகிப்பாய்
செல்வாய் பிறர்க்குள்
   செயல் அறியேன்  .........................பூரணமே !   64

வாரிதியாய் வையமெல்லாம் மன்னும்
   அண்ட பிண்டமெல்லாம்
சாரதியாய் நின்ற 
    தலமறியேன்  ................................பூரணமே !  65

வித்தாய் மரமாய்  
   வெளியாய் ஒளியாய்
நீ சத்தாயிருந்த 
   தரமறியேன்  ................................   பூரணமே !   66

தத்துவத்தைப் பார்த்து மிக
   தன்னை ஐந்தறிவால்
உய்த்து  உனைத்தான் பாராமல்
   உய்வாரோ  ...................................  பூரணமே !   67

ஒன்றாய் உயிராய்
   உடல்தோறும் நீ இருந்தும் 
என்றும் அறியார்கள் 
ஏழைகள்தாம் ..................................  பூரணமே !   68

நேற்றென்றும் நாளை என்றும் 
    நினைப்பு மறைப்பாய் படைத்து
மாற்றமாய் நின்ற 
   வளமறியேன் ...............................  பூரணமே !  69

மனம் சித்தி  சித்தம்
   மகிழ்வறிவு  ஆங்காரமதாய்
நினவாம் தலமான 
   நிலை அறியேன் ........................   பூரணமே ! 70








தொடரும் ......
   


Wednesday, 20 May 2020

பட்டினதார் - பூரண மாலை ( 6 )

பட்டினத்தார் பாடல்கள்

பூரண மாலை 





மூலவித்தாய் நின்று முளைத்து
     உடல்தோறும் இருந்து
காலன் என வழிக்கும்
கணக்கறியேன்...................பூரணமே !    46

உள்ளும் புறம்புமாய்
      உடலுக்குள்  நீயிருந்தது
எள்ளளவும் நான் அறியாது
     இருந்தேனே.....................பூரணமே !    47

தாயாகித் தந்தையாய்
   தமர் கிளைஞர் சுற்றமெல்லாம்
நீயாகி  நின்ற
    நிலை அறியேன் ..............பூரணமே !    48

விலங்கு புள் ஊர்வன அசரம்
    விண்ணவர் நீற்ச் சாதி மனு
குலங்கள் எழுவகைல் நின்ற
   குறிப்பறியேன்....................பூரணமே !   49

ஆணாகிப் பெண்ணாய்
       அலியாய்  வேற்றுருவாய்
மாணாகி நின்ற
     வகை அறியேன் ...................பூரணமே !    50

வாலையாய்ப் பக்குவமாய்
     வளர்ந்து கிழந்தானாகும்
பாலையாய் நின்ற
    பயனறியேன்........................பூரணமே !    51

பொய்யாய்ப் புவியாய்
    புகழ் வாரிதியாகி
மெய்யாகி நின்ற
வியனறியேன்.............................பூரணமே !   52

பூவாய்  மனமாகிப்
    பொன்னாகி  மாற்றாகி
நாவாய்ச் சொல்லான
நயமறியேன்   .............................பூரணமே !   53

முதலாய் நடுவாகி
    முப்பொருளாய் மூன்றுலகாய்
இதமாகி  நின்ற
   இயலறியேன்........................பூரணமே !   54

ஊணாய் உடலுயிராய்
     உண்ணிநிறைந்த கண்ணொளியாய்
தேனாய்  ருசியான
      திறனறியேன் ..........................பூரணமே !  55

வித்தாய்  மரமாய்
    விளைந்த கனியாய் பூவாய்
சித்தாகி நின்ற
     திறமறியேன் ...........................பூரணமே !  56

ஐவகையும் பெற்று உலக
    அண்ட பகிரண்டமெல்லாம்
தெய்வமென நின்ற
     திறமறியேன்..........................பூரணமே .....57

மனமாய் கனவாகி
    மாயையாய் உள்ளிருந்து
நினைவாகி நின்ற
   நிலையறியேன் ......................பூரணமே ..   58

சக்தி சிவம் இரண்டாய்
   தான் முடிவில் ஒன்றாகி
சித்திரமாய் நின்ற
      திறமறியேன் ..........................பூரணமே !   59

பொறியாய்ப் புலனாகிப்
     பூத பேதப் பிரிவாய்
அறிவாகி நின்ற
    அளவறியேன் .........................பூரணமே !   60





( தொடரும் )















Tuesday, 19 May 2020

பட்டினதார் - பூரண மாலை ( 5 )

பட்டினத்தார்  பாடல்கள்  

பூரண  மாலை 

கருவாய் உருவாய்க் கலந்து
          உலகெலாம்  நீயாய்
அருவாகி நின்றது 
         அறிகிலேன்           .............  பூரணமே !  31

செம்பொற் கமலத் திருவடியைப் 
            போற்றாமல்
பம்பை கொட்டா ஆடும் 
           பிசாசானேன்         ............. பூரணமே !    32

எனக்குள்ளே  நீயிருக்க
       உனக்குள்ளே நானிருக்க 
மனக் கவலைத் தீர
      வரம் அருள்வாய்      ............. பூரணமே     33

எழுவகைத் தோற்றத்தில்
      இருந்து விளையாடினதைப்
பழுதறவே  பாராமல்
     பயன் அழிந்தேன்     ............... பூரணமே !    34

சாதி பேதங்கள் தமை
      அறிய மாட்டாமல்
வாதனையால் நின்று 
       மயங்கினேன்              ............... பூரணமே !     35

குலம் ஒன்றாய் நீ படைத்த
     குறையை அறியாமல் யான்
மல பாண்டத்துள் இருந்து
      மயங்கினேன்      .......................  பூரணமே !     36

அண்ட பிண்டமெல்லாம் 
      அணுவுக்கு அணுவாய் 
 நீ கொண்ட வடிவின் 
      குறிப்பறியேன்     ..................  பூரணமே  !!     37

சகத்திரத்தின் மேலிருக்கும் 
      சற்குருவைப் போற்றாமல்
அகத்தினுடை ஆணவத்தால்
      அறிவிழந்தேன் ....................... பூரணமே !     38

ஐந்து பொறியை அடக்கி
     உனைப் போற்றாமல்
நைந்துருகி நிஞ்சம் 
    நடுங்கினேன்      ...........................பூரணமே !   39

என்னைத் திருக்கூத்தால் 
      இப்படி நீ ஆட்டுவித்தாய் 
உன்னை அறியாது
     உடல் அழிந்தேன்.....................பூரணமே !   40

நரம்புதசை தோல் எலும்பு
    நாற்றத்துக்குள் இருந்து
வரம்பறிய மாட்டாமல்
   மயங்கினேன்.............................பூரணமே !    41

சிலந்தியுடை  நூல் போல்
    சீவசெந்துக்குள் இருந்த
நலந்தனைப் பாராமல் 
    நலமிழந்தேன்    .....................பூரணமே !    42

குருவாய்ப் பரமாகிக் 
    குடிலை சத்தி நாதவிந்தாய் 
அருவாய் உருவானது
    அறிகிலேன்     ..........................  பூரணமே .. 43

ஒளியாய்க் கதிர்மதியாய்
    உள்ளிருவாய் அக்கினியாய்
வெளியாகி நின்ற
    வியன் அறியேன்........................பூரணமே !  44

இடையாகிப் பிங்கலையாய்
     எழுந்தசுழுமுனையாய்
உடலுயிராய் நீயிருந்த 
உளவறியேன்.......................................பூரணமே !  45

( தொடரும் ) 

Thursday, 14 May 2020

திருமூலர் - நந்தியெம் பெருமான்

நந்தியின் அருமையும் பெருமையும்



நந்தியின் அருளாலே 
மூலனை நாடிப் 
பின்

நந்தி அருளாலே 
சதாசிவன் ஆயினேன்

நந்தி அருளால் 
மெய்ஞ் ஞானத்துள் 
நண்ணினேன்

நந்தியின் அருளால் 
நான் இருந்தேனே !!


ஹரி ஓம்.... !




சிவாலயம் எழுப்புதல்

சிவாலயம் எழுப்புதல்

சிவாலயம் எழுப்புவதால் ஒருவன் பெறக்கூடிய மேன்மையை பற்றிச் சூத முனிவர் நைமிசாரணிய முனிவர்களுக்கு கூறலாணார்.
(1) சிவாலயம் எழுப்புபவன் தினமும் பெருமானை வழிபாடு செய்தால் உண்டாகும் சிறப்பை அகைகிறான்.
(2) அவன் குலத்தில் வாழ்ந்த நூறு தலைமுறையினர் சிவலோகம் செல்வர்.
(3) சிவாலயம் எழுப்ப வேண்டும் என்று மனதால் நினைத்தாலே ஏழு பிறவிகளில் செய்த பாலங்களில் இருந்து விடுபடுவான்.
(4) ஆலயம் கட்டி முடித்தால் அதில் உள்ள கற்க்கள் ஒவ்வொன்றிர்க்கும் ஒவ்வோரு ஆயிரம் ஆண்டுகள் சிவ லோகத்தில் இருக்கும் வேறு பெறுவர்.
(5) சிவலிங்கத்தை உருவாக்குபவர் சிவலோகத்தில் அறுபதினாயிரம் ஆண்டுகள் இருப்பார். அவனது தோன்றல்களும் சிவலோகத்தை அடையும் புன்னியம் பெறுவர்.
(6) சிவாலயத் தொண்டுகளில் ஈடுபடு வோரை எமன் நெருங்கக் கூடா தென்று சிவ பெருமான் எச்சரித்து உள்ளார். அவர்கள் தலைமுறையினரைக் கூட எமதூதர்கள் நெருங்க மாட்டார்கள்.
(7) சிவாலயத்தில் உரிய பொருள்களால் அபிஷேகம் செய்து வழி படுபவன் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனைப் பெறுவான்.
(8) கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசியில் சிவ லிங்கத்துக்கு சிவ லிங்கத்துக்கு நெய் அபிஷேகம் செய்தால் சர்வ பாவங்களும் விலகும்.
(9) பெளர்ணமி, அம்மாவாசைகளிலும் சிவ லிங்கத்திற்க்கு அபிஷேக ,ஆராதனைகள் செய்வோர்க்கும் அத்தகைய பலனே கிடைக்கும்.
(10) பிரதோஷ காலங்களில் நெய்யபிஷேகம் செய்தால் அது தெரிந்தோ,தெரியாமலோ செய்த பாவங்களை நீர்மூலமாக்கும்.
(11) பசும்பாலால் அபிஷேகம் செய்தால் சிவலோகமடைந்து என்றும் மகிழ்சியாக இருப்பார்.
(12) நவக்கிரகங்களும் அவனுக்கு அருள் புரியும்.
(13) சிவ பெருமானை மனதிற்குகந்த மலர்களால் அர்சுனை செய்யலாம். உலர்ந்த வில்வமும் அர்ச்சனைக்கு உரியதே. (ஆனால்) தாழம் பூ அர்சுனைக்கு ஆகாது.
(14) மலர்களுக்குப் பதில் பிருங்கராச பத்திரம்,அருகம்புல் போன்றவற்றால் அர்சுனை செய்யலாம்.
(15) புண்ணியக் காலங்களில் சிவ பெருமானை வழிபடுவோர் தினசரி வழி பாட்டிலூம் ஆயிரம் பங்கு அதிகமாக பலன் பெருவர்.
ஹரி ஓம் !

Monday, 11 May 2020

ஜாதிக்காய்

ஜாதிக்காய் – மருத்துவ பயன்கள்


ஜாதிக்காய் (சாதிக்காய்) துவர்ப்பு மற்றும் காரச் சுவைகள் கொண்டது, வெப்பத் தன்மையானது. சிறு அளவில் ஜாதிக்காய் தினமும் உண்டுவர, உடல் வெப்பத்தை அகற்றும்; இரைப்பை, ஈரல் ஆகியவை பலமாகும்; மனமகிழ்ச்சியை அளிக்கும்; ஆண்மைத் தன்மையைப் பெருக்கும், நடுக்கம், பக்கவாதம் ஆகியவை தீரும். செரிமானத்திறன் மிகுந்து உடல் சுறுசுறுப்பாக இருக்கும். அதிகமாகச் சாப்பிட்டால் மயக்கத்தை ஏற்படுத்தும்.

ஜாதிக்காய் பிரதானமாகக் குழந்தைகளுக்கான மருத்துவத்தில் பயன்படுகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் பொருமல், வயிற்றுவலி, சீதபேதி ஆகியவற்றிற்கு ஜாதிக்காய் முக்கியம்.

ஜாதிக்காய் எண்ணெயை மேல் பூச்சாகத் தடவ, புண்கள், காயங்கள், பாரிசவாயு முதலியவற்றைக் கட்டுப்படுத்தும். மேலும், 2 சொட்டு அளவில் உள்ளுக்குள்; கொடுக்க, சீதபேதி, கழிச்சல் போன்றவையும் கட்டுப்படும்.

ஜாதிக்காய் மலேசியா போன்ற நாடுகளில் இயற்கையாக வளர்கின்ற மரம். இலங்கையிலும், இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் பயிர் செய்யப்படுகின்றது. அடர் தொகுப்பில் இலைகள் கொண்ட பசுமையான சோலைகளில் காணப்படக்கூடியது.

ஜாதிக்காய் இலைகள் மாற்றடுக்கில் அமைந்தவை, பெரியவை. ஆண், பெண் பூக்கள் தனித்தனியானவை. காய், சதைப்பற்றுள்ளது. மெல்லிய ஓட்டால் மூடப்பட்டிருக்கும் ஜாதிக்காய் பழங்கள், மிகவும் மணமுள்ளவை. மேலே பழுப்பு நிறமாகவும், உட்புறம் சதைப்பகுதி நிறைந்ததாகவும் இருக்கும்.
ஜாதிக்காய் தோலை நீக்கி உபயோகிக்கப்படுகின்றது. மேல் தோல் புளிப்பும், துவர்ப்பும் கொண்டது. ஊறுகாய் போடப் பயன்படுகின்றது. சாதிக்காய், குலக்காய் என்கிற பெயர்களும் உண்டு. உலர்ந்த பழங்கள் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.
வயிற்றுப்போக்கு, சீதபேதி குணமாக குழந்தைகளுக்கு ½ தேக்கரண்டி அளவு தேனில், ஜாதிக்காய் 20 சுற்றுகள் இழைத்து, தினமும் இருவேளைகள், நாக்கில் தடவ வேண்டும்.

பெரியவர்களுக்கு ஜாதிக்காய் பொடியை ½ கிராம், அளவாக பாலில் கலந்து, ஒரு நாளைக்கு 3 வேளைகள் வீதம் சாப்பிட்டுவர வேண்டும்.
2 சொட்டு ஜாதிக்காய் எண்ணெயை வலியுள்ள இடத்தில் பூச பல்வலி குணமாகும்

ஜாதிக்காய் 100 கிராம், சுக்கு 100 கிராம், சீரகம் 300 கிராம், இவற்றை நன்றாகத் தூள் செய்து, பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு, உணவுக்கு முன்னர், 2 கிராம் அளவு சாப்பிட்டுவர அஜீரணம் குணமாகும்.

ஜாதிக்காய், சுக்கு ஒவ்வொன்றும் 20 கிராம், சீரகம் 50 கிராம், நன்கு தூளாக்கி வைத்துக்கொண்டு, ½ கிராம் தூளுடன், ¼ தேக்கரண்டி சர்க்கரை கலந்து, உணவுக்கு முன்னர் சாப்பிட குடல்வாயு குணமாகும்.

சாதிக்காயை 10 சுற்றுக்கள் தேனில் உரைத்து, பசையாக்கி, கண்ணைச்சுற்றி பற்றுப்போட கண் கருவளையம் மறையும்.




Saturday, 2 May 2020

கண்ணனின் 22 நாமங்கள் !

 கண்ணனின் 22 திரு நாமங்கள்                                                                                     




மணிமான்,
யக்ஞர், 
அச்யுதா, 
ஹயக்ரீவர், 
கேசவா, 
விஷ்ணு, 
உருக்ரமா,
ஈஸ்வரா, 
சக்ரதாரி, 
கதாதரா, 
மதுசூதனா, 
குபேந்திரா, 
தாரக்ஷயா, 
ஹலாதரா, 
ஹ்ருஷிகேசா, 
நாராயணா, 
ப்ருஷ்ணிஹர்பா, 
யோகேஸ்வரா,
புருஷோத்தமா, 
கோவிந்தா, 
மாதவா, 
வைகுண்டாதிபதி, 
ஹரி ஓம் ! 

தர்ப்பணம்


தர்ப்பணம் 
அமர்தல்
நீராடி உலர்ந்த ஆடை அணிந்து
கிழக்கு நோக்கி, தரையில்
அமராது, ( 1 ) தர்பை பாய் ( அ )
( 2 ) பலகை ( அ )  ( 3 ) துணி விரித்து
அமர்தல் வேண்டும்.
  ( மகளிர் ஒரு வெற்றிலையில் மஞ்சள்
பிள்ளையார் பிடித்து வைத்து, குங்குமப்
பொட்டிட்டு, பூ வைத்து, அரிசி மாவில் 
ஓம் என கோலமிட்டு, உட்காரும்
இடத்திற்கு வலதுபக்கம் வைக்கவும் )
பவித்ரம் அணிதல்
தர்பையில் மோதிரம் செய்து
வலது கை மோதிர விரலில் 
அணிந்து கொள்ள வேண்டும்.
சட்டம் அமைத்தல்


6 நீளமான தர்பைகளை மேற்கண்டவாறு
அமைத்துக் கொள்ளவேண்டும் 
பிரபஞ்ச சக்தி
ஓம்காரம் மூன்று முறை 
சொல்லவும்
குரு ஸ்துதி
ஓம்
குருர் பிரம்மா
குருர் விஷ்ணு
குருர் தேவோ 
மஹேஸ்வரஹ !
குரு சாக்ஷாத்
பரப் பிரம்மா
தஸ்மை 
ஸ்ரீ குரவே நமஹ !
அண்ட சராசர 
குரு மஹா தேவர்களுக்கு
அரோஹரா ! 
அங்க சுத்தி, கர சுத்தி
ஆம் அங்குஷ்ட்டாப்யாம் நமஹ
ஓம் ஹ்ரீம் தர்ஜ நீப்யாம் நமஹ
க்ரோம் மத்ய மாப்யாம் நமஹ
ஆம் அநாமிகாப்யாம் நமஹ
ஹ்ரீம் கனிஷ்டிகாப்யாம் நமஹ
க்ரோம் கரதல கரப்ருஷ்டாப்யாம் நமஹ
க்ரோம் கரதல கரப்ருஷ்டாப்யாம் நமஹ
க்ரோம் கரதல கரப்ருஷ்டாப்யாம் நமஹ
க்ரோம் கரதல கரப்ருஷ்டாப்யாம் நமஹ
ஆம் ஹ்ருதயாய நமஹ
ஹ்ரீம் சிரஸே ஸ்வாஹா
க்ரோம் சிகாயை வஷ்ட்
ஆம் கவசாய ஹீம்
ஹ்ரீம் நேத்ராயாய வௌஷட்
க்ரோம் அஸ்த்ராய பட்
ஓம் பூர்புவஸ்ஸீ வரோம் இதி திக்பந்த :
விநாயகர் துதி
ஓம் கணானா(ஆ)ம்  தூவா கணபதி
               ஹீம் அவா மஹே
கவீம் கவீம்நாம் 
         முபவச்ர வஸ்தவம்
ஜேஸ்டா ராஜம்
        பிரம்மனாம் பிரம்மன ஸ்பதன்
ஆனஸ்ரன் வன்னுதி 
        பிஸ்ஸீத சாதனம்
ஓம் கணாதிபதயே நமஹ !
ஐந்து கரத்தனை
ஆனை முகத்தினை
இந்தின்
இளம்பிறை போலும்
எயிற்றனை
நந்தி மகன் தனை
ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்து
அடி போற்றுகின்றேனே ! 
ஓம் 
  ஸ்ரீ விநாயகப் பெருமான் திருவடிகள்
      போற்றி போற்றி !
வினைகளையும் விக்கினங்களயும்
   கலைந்து எறியும் 
     விநாயகப் பெருமான் திருவடிகள்
         போற்றி போற்றி !
விதிக்கு விதி செய்யும்
     விநாயகப் பெருமான் திருவடிகள்
         போற்றி போற்றி !
அவித்யா மாயை நீக்கி
   வித்யா ரூபனாக்கும்
     விநாயகப் பெருமான் திருவடிகள்
         போற்றி போற்றி !
அருகம்புல்லை ஏற்று
 அனைத்து நலங்களையும் நல்கும்
    ஆனை முகத்தோன் திருவடிகள்
      போற்றி போற்றி !
அருகம்புல் அல்லது ஒரு புஷ்பத்தை
விநாயகருக்கு அர்ச்சிக்கவும் !
சங்கல்பம் 
வலது தொடையில், முட்டிக்கு அருகில்,
இடது உள்ளங்கை வானத்தை நோக்கி
இருக்குமாறு வைத்து, வலது 
உள்ளங்கையை, இடது ஊள்ளங்கையில்
படிய வைத்து, சத்தியப் பிரமாணம்
செய்தல் 
ஓம் ஸ்ரீமந் நாராயண மூர்த்தியே !
வைகுண்டத்தில் வாழும்
வவைகுண்ட வாசனே !
ஸ்ரீதேவி, பூதேவி, ஸ்ரீ ரெங்கநாயகி தாயார்
சமேத ஸ்ரீ ரங்கநாதனே !
ஸ்ரீரங்கத்தில் பள்ளிகொண்டேனே !
எங்களின்,
எளிய தர்ப்பண பூஜையில் எழுந்தருளி
குற்றம் குறைகள் ஏது ஏற்படாத
வண்ணம் காத்து துணை நின்று,
வழி நடத்தி, முறையான பலன்கள்
எங்கள் பித்ருக்களைச் சென்றடைய
உங்களின் திருவடிகளைச் 
சரணடைகின்றேன் !
தர்பைச் சட்டத்தில் பிதுர் மூர்த்திகளை
எழுந்தருளச் செய்தல். 
பிதுர் தேவர்களே ! பிதுர் தேவதைகளே !
எங்களின் தர்பைச் சட்டத்தில்,
சூக்ஷும தேகத்தில் எழுந்தருளி,
முறையான பலன்கள் 
பிதுர்களின் திருவடிகளைச் 
சென்றடைய, உங்களின் திருவடிகளைப்
பணிகின்றோம் !
பூணூல் கலைமாற்றம் 
செய்துகொள்ள வேண்டும் 
தர்ப்பணம் 
சட்டத்தில்
 1ல் இருந்து 6 வரை தந்தை வழி
1. தகப்பனாருக்கு:
   ……. கோத்திரம், ………குலம்,     
……….என்ற பெயருடைய என்
தகப்பனார் நினைவோடு,
நெடுங்கிடையாய் நாமளிக்கும்
நீர் தாரை எள்ளோடு,
நுணல் தர்பை யாவையுமாய்,
மூத்தார் துதி பாடி,
மூலவரை யாம் பணிவோம் 
என்று சொல்லி,
மூன்று முறை,
 " என் தகப்பனாருக்கு 
தில தர்ப்பணம் சமர்பயாமி"
என்று கூறிக்கொண்டு, 
கட்டை விரலுக்கும், ஆட்காட்டி 
விரலுக்கும் இடைப்பட்ட வழியில்
எள்ளும், தண்ணீரும், 1  என்ற எண்
உள்ள இடத்தில் விழுமாறு 
செய்ய வேண்டும்.
2. தாத்தாவிற்கு :
( தாத்தாவின் பெயர் தெரியாதவர்கள்
கோவிந்தன், கோவாலன், மாதவன், 
என்று இறைவனின் நாமத்தில்
ஒன்றை சொல்லிக்கொள்ளலாம் )
   ……. கோத்திரம், ………குலம்,     
……….என்ற பெயருடைய என் தந்தை வழி
தாத்தாவின் நினைவோடு,
நெடுங்கிடையாய் நாமளிக்கும்
நீர் தாரை எள்ளோடு,
நுணல் தர்பை யாவையுமாய்,
மூத்தார் துதி பாடி,
மூலவரை யாம் பணிவோம் 
என்று சொல்லி,
மூன்று முறை,
 " என் தாத்தாவிற்க்கு 
தில தர்ப்பணம் சமர்பயாமி"
என்று கூறிக்கொண்டு, 
கட்டை விரலுக்கும், ஆட்காட்டி 
விரலுக்கும் இடைப்பட்ட வழியில்
எள்ளும், தண்ணீரும், 2  என்ற எண்
உள்ள இடத்தில் விழுமாறு 
செய்ய வேண்டும்.
3. முப்பாட்டனாருக்கு :
( முப்பாட்டனாரின் பெயர் தெரியாதவர்கள்
கோவிந்தன், கோபாலன், மாதவன், 
என்று இறைவனின் நாமத்தில்
ஒன்றை சொல்லிக்கொள்ளலாம் )
 ……. கோத்திரம், ………குலம்,     
……….என்ற பெயருடைய என் தந்தை வழி
முப்பாட்டனாரின் நினைவோடு,
நெடுங்கிடையாய் நாமளிக்கும்
நீர் தாரை எள்ளோடு,
நுணல் தர்பை யாவையுமாய்,
மூத்தார் துதி பாடி,
மூலவரை யாம் பணிவோம் 
என்று சொல்லி,
மூன்று முறை,
 " என் முப்பாட்டனாருக்கு
தில தர்ப்பணம் சமர்பயாமி"
என்று கூறிக்கொண்டு, 
கட்டை விரலுக்கும், ஆட்காட்டி 
விரலுக்கும் இடைப்பட்ட வழியில்
எள்ளும், தண்ணீரும், 3  என்ற எண்
உள்ள இடத்தில் விழுமாறு 
செய்ய வேண்டும்.
4. தாயாருக்கு :
 ……. கோத்திரம், ………குலம்,     
……….என்ற பெயருடைய என்
தாயாரின் நினைவோடு,
நெடுங்கிடையாய் நாமளிக்கும்
நீர் தாரை எள்ளோடு,
நுணல் தர்பை யாவையுமாய்,
மூத்தார் துதி பாடி,
மூலவரை யாம் பணிவோம் 
என்று சொல்லி,
மூன்று முறை,
 " என் தாயாருக்கு 
தில தர்ப்பணம் சமர்பயாமி"
என்று கூறிக்கொண்டு, 
கட்டை விரலுக்கும், ஆட்காட்டி 
விரலுக்கும் இடைப்பட்ட வழியில்
எள்ளும், தண்ணீரும், 4  என்ற எண்
உள்ள இடத்தில் விழுமாறு 
செய்ய வேண்டும்.
5. பாட்டிக்கு :
 ……. கோத்திரம், ………குலம்,     
……….என்ற பெயருடைய என் தந்தை வழி
பாட்டியின் நினைவோடு,
நெடுங்கிடையாய் நாமளிக்கும்
நீர் தாரை எள்ளோடு,
நுணல் தர்பை யாவையுமாய்,
மூத்தார் துதி பாடி,
மூலவரை யாம் பணிவோம் 
என்று சொல்லி,
மூன்று முறை,
 " என் தந்தை வழி பாட்டிக்கு
தில தர்ப்பணம் சமர்பயாமி"
என்று கூறிக்கொண்டு, 
கட்டை விரலுக்கும், ஆட்காட்டி 
விரலுக்கும் இடைப்பட்ட வழியில்
எள்ளும், தண்ணீரும், 5  என்ற எண்
உள்ள இடத்தில் விழுமாறு 
செய்ய வேண்டும்.
6. முப்பாட்டிக்கு :
 ……. கோத்திரம், ………குலம்,     
……….என்ற பெயருடைய என் தந்தை வழி
முப்பாட்டியின் நினைவோடு,
நெடுங்கிடையாய் நாமளிக்கும்
நீர் தாரை எள்ளோடு,
நுணல் தர்பை யாவையுமாய்,
மூத்தார் துதி பாடி,
மூலவரை யாம் பணிவோம் 
என்று சொல்லி,
மூன்று முறை,
 " என் தந்தை வழி முப்பாட்டிக்கு
தில தர்ப்பணம் சமர்பயாமி"
என்று கூறிக்கொண்டு, 
கட்டை விரலுக்கும், ஆட்காட்டி 
விரலுக்கும் இடைப்பட்ட வழியில்
எள்ளும், தண்ணீரும், 6  என்ற எண்
உள்ள இடத்தில் விழுமாறு 
செய்ய வேண்டும்.
 7ல் இருந்து 12 வரை தாய் வழி
7. தாயாரின் தந்தைக்கு :
…….கோத்திரம்( தெரியாவிட்டால் விட்டுவிடலாம் )
…………  குலம்.
………… என்ற பெயருடைய 
( பெயர் தெரியாவிட்டால், எதாவது
இறைவனின் நாமம் )
என் தாயாரின் தகப்பனாரின் நினைவோடு
நெடுங்கிடையாய் நாமளிக்கும்
நீர் தாரை எள்ளோடு,
நுணல் தர்பை யாவையுமாய்,
மூத்தார் துதி பாடி,
மூலவரை யாம் பணிவோம் 
என்று சொல்லி,
மூன்று முறை,
 " என் தாயாரின் தகப்பனாருக்கு
தில தர்ப்பணம் சமர்பயாமி"
என்று கூறிக்கொண்டு, 
கட்டை விரலுக்கும், ஆட்காட்டி 
விரலுக்கும் இடைப்பட்ட வழியில்
எள்ளும், தண்ணீரும், 7  என்ற எண்
உள்ள இடத்தில் விழுமாறு 
செய்ய வேண்டும்.
8. தாயாரின் தாத்தாவுக்கு :
…….கோத்திரம்( தெரியாவிட்டால் விட்டுவிடலாம் )
…………  குலம்.
………… என்ற பெயருடைய 
( பெயர் தெரியாவிட்டால், எதாவது இறைவனின் நாமம் )
என் தாயாரின் தகப்பனார் வழி 
தாத்தாவின் நினைவோடு
நெடுங்கிடையாய் நாமளிக்கும்
நீர் தாரை எள்ளோடு,
நுணல் தர்பை யாவையுமாய்,
மூத்தார் துதி பாடி,
மூலவரை யாம் பணிவோம் 
என்று சொல்லி,
மூன்று முறை,
 " என் தாயாரின் தகப்பன் வழி  
தாத்தாவின் நினைவோடு
தில தர்ப்பணம் சமர்பயாமி"
என்று கூறிக்கொண்டு, 
கட்டை விரலுக்கும், ஆட்காட்டி 
விரலுக்கும் இடைப்பட்ட வழியில்
எள்ளும், தண்ணீரும், 8  என்ற எண்
உள்ள இடத்தில் விழுமாறு 
செய்ய வேண்டும்.
9. தாயாரின் முப்பாட்டனாருக்கு :
…….கோத்திரம்( தெரியாவிட்டால் விட்டுவிடலாம் )
…………  குலம்.
………… என்ற பெயருடைய 
( பெயர் தெரியாவிட்டால், எதாவது
இறைவனின் நாமம் )
என் தாயாரின் தகப்பனார் வழி 
முப்பாட்டனாரின் நினைவோடு
நெடுங்கிடையாய் நாமளிக்கும்
நீர் தாரை எள்ளோடு,
நுணல் தர்பை யாவையுமாய்,
மூத்தார் துதி பாடி,
மூலவரை யாம் பணிவோம் 
என்று சொல்லி,
மூன்று முறை,
 " என் தாயாரின் தகப்பன் வழி  
முப்பாட்டனாரின் நினைவோடு
தில தர்ப்பணம் சமர்பயாமி"
என்று கூறிக்கொண்டு, 
கட்டை விரலுக்கும், ஆட்காட்டி 
விரலுக்கும் இடைப்பட்ட வழியில்
எள்ளும், தண்ணீரும், 9  என்ற எண்
உள்ள இடத்தில் விழுமாறு 
செய்ய வேண்டும்.
10. தாயாரின் தாய்க்கு :
…….கோத்திரம்( தெரியாவிட்டால் விட்டுவிடலாம் )
…………  குலம்.
………… என்ற பெயருடைய 
( பெயர் தெரியாவிட்டால், எதாவது இறைவியின்
 நாமம் )
என் தாயாரின் தாயின் நினைவோடு
நெடுங்கிடையாய் நாமளிக்கும்
நீர் தாரை எள்ளோடு,
நுணல் தர்பை யாவையுமாய்,
மூத்தார் துதி பாடி,
மூலவரை யாம் பணிவோம் 
என்று சொல்லி,
மூன்று முறை,
 " என் தாயாரின் தாய்க்கு
தில தர்ப்பணம் சமர்பயாமி"
என்று கூறிக்கொண்டு, 
கட்டை விரலுக்கும், ஆட்காட்டி 
விரலுக்கும் இடைப்பட்ட வழியில்
எள்ளும், தண்ணீரும், 10  என்ற எண்
உள்ள இடத்தில் விழுமாறு 
செய்ய வேண்டும்.
11. தாயாரின் பாட்டிக்கு :
…….கோத்திரம்( தெரியாவிட்டால் விட்டுவிடலாம் )
…………  குலம்.
………… என்ற பெயருடைய 
( பெயர் தெரியாவிட்டால், எதாவது
இறைவியின் நாமம் )
என் தாயாரின் பாட்டியின் நினைவோடு
நெடுங்கிடையாய் நாமளிக்கும்
நீர் தாரை எள்ளோடு,
நுணல் தர்பை யாவையுமாய்,
மூத்தார் துதி பாடி,
மூலவரை யாம் பணிவோம் 
என்று சொல்லி,
மூன்று முறை,
 " என் தாயாரின் பாட்டிக்கு
தில தர்ப்பணம் சமர்பயாமி"
என்று கூறிக்கொண்டு, 
கட்டை விரலுக்கும், ஆட்காட்டி 
விரலுக்கும் இடைப்பட்ட வழியில்
எள்ளும், தண்ணீரும், 11  என்ற எண்
உள்ள இடத்தில் விழுமாறு 
செய்ய வேண்டும்.
12. தாயாரின் முப்பாட்டிக்கு :
…….கோத்திரம்( தெரியாவிட்டால் விட்டுவிடலாம் )
…………  குலம்.
………… என்ற பெயருடைய 
( பெயர் தெரியாவிட்டால், எதாவது
இறைவியின் நாமம் )
என் தாயாரின் முப்பாட்டியின் நினைவோடு
நெடுங்கிடையாய் நாமளிக்கும்
நீர் தாரை எள்ளோடு,
நுணல் தர்பை யாவையுமாய்,
மூத்தார் துதி பாடி,
மூலவரை யாம் பணிவோம் 
என்று சொல்லி,
மூன்று முறை,
 " என் தாயாரின் முப்பாட்டிக்கு
தில தர்ப்பணம் சமர்பயாமி"
என்று கூறிக்கொண்டு, 
கட்டை விரலுக்கும், ஆட்காட்டி 
விரலுக்கும் இடைப்பட்ட வழியில்
எள்ளும், தண்ணீரும், 12  என்ற எண்
உள்ள இடத்தில் விழுமாறு 
செய்ய வேண்டும்.
காருண்ய தர்ப்பணம்
1. 64 தலைமுறையைச் சார்ந்த பித்ருக்களுக்கு
2. அகால மரணமடைந்த உயிர்களுக்கு
3. நினைவு கோரமுடியாத, மறைந்த உயிர்களுக்கு
4. பிறவிக்குள் வரமுடியாமல் 
தவித்துக் கொண்டிருக்கும் உயிர்களுக்கு
5.பாரதீய தீப கற்பம்,
போதி பாத மண்டலம்,
தச சாந்தி தீப மண்டலம்,
போயாங்கு தீப மண்டலம்,
சங்கநாத தீப மண்டலம்,
காரடையான் தீப மண்டலம்,
கூட்டெலும்பு கூட்டு மண்டலம்,
இல்லி கண்ணி தீப மண்டலம்,
கர்ஜனை சாதனை தீப மண்டலம்,
சுங்க பட்டாணி தீப மண்டலம்,
சுகர்னோ நாதி தீப மண்டலம்,
பிரவாக நீர்த்தாரை தீப மண்டலம்,
நீள் நதி நில மண்டலம்,
பனி பூ சங்கம மண்டலம்,
குதியாட்ட கூர் மண்டலம்,
பூனைக்கண் தீப மண்டலம்,
சப்த தீப மண்டலம்,
தோனி சாதனை தீப மண்டலம்,
கந்தபுரி மண்டலம்,
வல்லநாடி மண்டலம், 
ஐக்கிய சித்தி மண்டலம், 
ஆகிய மண்டலங்களில் வாழும் பிதுர்களுக்கு,
6. சிறப்பான உயிகளுக்கு,
7. இறை நிலை அடையாத ஓரறிவு முதல்
ஆறறிவு வரையிலான மறைந்த 
அனைத்து ஜீவர்களுக்கும்,
8, வசு, ருத்ர, ஆதித்ய பித்ரு மண்டலங்களில்
வாழும் பிதுர்கள், பிதுர் தேவர்கல், பிதுர்
தேவதைகள் அனைவருக்கும் என்று கூறி,
ஓம்
தத்தத் கோத்ராந்
தத்தத் ஸர்மண வஷு வஷு
ஸ்வீ ரூபாந் பித்ருப்ய மாதுலாதி
வர்கத் வயா வஸிஷ்டாந் ஸர்வாந்
காருண்ய, பித்ரூந் ஸ்வதா நமஸ் 
என்ற மந்திரத்தை, ஒவ்வொரு
முறையும் சொல்லி, 
மூன்று முறை 
தர்பயாமி, தர்பயாமி, தர்பயாமி
என்று கூறி
எள் நீர் வார்க்கவும் .
சேவித்தல்
தர்பை சட்டத்தைத் தொட்டு சேவிக்கவும்
பூணூலை பழைய நிலைக்கு
கலைமாற்றம் செய்துகொள்ளவும்.
வேண்டுதலை குருவின் திருவடிக்கு
சமர்ப்பித்தல்.
பரம்பொருளே!
இரை அருளே !
அனைத்திலும் நின்று
எங்களை வழி நடத்தும்
இறை மஹா சக்தியே !
சற்குரு நாதனே ! 
ஸ்ரீலஸ்ரீ வேங்கடராம சித்த ஈசனே !
இடியாப்ப சித்த ஈசனின் 
வழித் தோன்றலே!
எது சரியோ அதுவே நடக்கட்டும்
அது நல்லதோ அதுவே கிடைக்கட்டும்
எங்களுக்கு மட்டுமல்ல,
எல்லா உயிர்களுக்கும்
அவ்வாறே நடக்கட்டும் !
அவ்வாறு செய்வதற்கு
நன்றி குருதேவா!
நன்றி ! நன்றி !! நன்றி !!!


ஹரி ஓம் !!!