Friday, 28 March 2014

கான்கிரீட் காடுகள்

பள்ளிப் பருவத்தில்  ( 1968  - 1970 ) ,  வாரப் பத்திரிகை ஒன்றில்  "  எங்கு  பார்த்தாலும்  கான்கிரீட்  காடுகள் " என்ற சுஜாதாவின்  வரிகளைப்  படித்து  ரசித்ததுண்டு. " என்ன ஒரு  அதிதமான  கற்பனை "   என்று  வியந்ததும்  உண்டு.  பின்னர்  பல  எழுத்தாளர்களின்  கற்பனையில்  ' பளபளவென்ற  தார் ரோடு, மழ  மழவென்ற  சிமெண்ட் சாலைகளை"  சந்தித்ததுண்டு.

பாரதியின்  ' காணி நிலம்  வேண்டும், வீடு  வேண்டும்,  வீட்டைச் சுற்றி  தோட்டம்  வேண்டும் "  என்ற  கனவில்  பாதி  நினைவானது. பின் வந்த எழுத்தாளர்களின் கற்பனையில் வந்த  கான்கிரீட்  காடுகளும்  பளபளவென்ற  சிமெண்ட்  சாலைகளும்  நினைவானது.  வீடும்,  வீட்டைச் சுற்றிய  கான்கிரீட்  காடுகளும், சிமெண்ட் தளங்களும்தான்   இன்றைய நிஜம்.

நகரங்கள்  மட்டுமல்ல, சிறு கிராமங்களும்  சிமெண்ட்  தரையில்  பளபளவென
மின்னுகின்றன.

ஏரிகள், குளங்கள் இருந்தாலும், அதற்கு நீர் கொணர்ந்த  பாதைகளும், கால்வாய்களும்  காணாமல் போய்விட்டன.

கான்கிரீட்  போர்வையால் , வான் தரும்  மழை நீரை உறிஞ்சமுடியாமல்  இந்த  மண் தவிக்கும் தவிப்பு  மனிதனுக்கு  புரியவில்லை.

சிறு வயதில், திருவானைக்காவல்  ஜம்புகேச்வரரையும், அவரைச் சுற்றி   நீர்   ஊற்றெடுத்துப்  பெருகுவதையும்   கண்கள் விரிய  பார்த்திருக்கிறேன்.  ஆனால்  இன்று,  ஊற்றுக் கண்கள்  அடைபட்டுப் போனதால்,  சிவ லிங்கத்தை சுற்றி நீர்  ஊற்றெடுப்பதில்லை  என்று  எங்கோ  படித்து  கண்  கலங்கியிருக்கிறேன். கோவிலைச்  சுற்றி  கான்கிரீட்  காடுகள்  முளைத்ததின்  விளைவோ  இது ?

இறைவா !!   வானவர்களுக்கு  அமுதம் தந்த  நீ , இந்த வெறும்  நரர்களுக்கு    நீரைத்தரமாட்டாயா?


















பாம்பாட்டி  சித்தர்

குற்றமற்ற  சிவனுக்கு  குண்டலம்  ஆனாய்
கூறும்  திருமாலுக்கு குடையானாய்
கற்றைக் குழல்  பார்வதிக்கு  கங்கணமானாய்
கரவாமல்  உளம் களிந்தாடு  பாம்பே !

மண்டலத்தைத்  தாங்கும் மிக வல்லமை  கொண்டாய்
மாயனுக்கு  படுக்கைக்கு  வண்ணப்  பாயானாய்
கண்ட  படை  நடுங்கிட  காட்சியும்  பெற்றாய்
கண்ணே  செவியாகக் கொண்டாய்  ஆடு  பாம்பே  !

இருவர்  மண்  சேர்த்திட  ஒருவர்  பண்ண
ஈரைந்து  மாதமாய்  வைத்த சூளை
அருமையாய் இருப்பினும்  அந்த  சூளை
அரைக்காசுக்கு  ஆகாது என்று  ஆடாய்  பாம்பே !

ஆசையென்னும்  செருப்பின்மேல்  அடியை வைத்தே
ஆங்கார  முட்காட்டை  அறவே  மிதித்தே
காசை எனும்  துர்க்குணத்தில்  கனலைக்  கொளுத்தி
காலாகாலம்  கடந்தோம்  என்று  ஆடாய்  பாம்பே  !


இடைக்காட்டுச்  சித்தர்  பாடல்
நாராயணக்  கோனார்  கூற்று

கண்ணுள்  கருமணியை,
கற்பகத்தை,
காஞ்சனத்தை ,
பெண்ணுருவப்  பாதியனை,
பேரின்பப்   முப்பொருளை,
விண்ணின்  அமுதை,
விளக்கொளியை,
வெங்கதிரை,
தண்ணளியை.
உள்ளில்  வைத்து
சாரூபம்  சாருவனே  !


Friday, 21 March 2014

பட்டினத்தார்  பாடல்கள்


பிறக்கும் பொழுது  கொண்டுவந்ததில்லை
பிறந்து  மண் மேல்
இறக்கும் பொழுது  கொண்டுபோவதில்லை
இடை நடுவில்  குறிக்கும் இச்செல்வம்
சிவன் தந்ததென்று  கொடுக்க அறியாது
இறக்கும்  குலாமருக்கு  என் சொல்லுவேன்
கச்சி  ஏகம்பனே !


ஊரும்  சதமல்ல
உற்றார்  சதமல்ல
உற்றுப் பெற்ற பேரும்  சதமல்ல
பெண்டிர்  சதமல்ல
பிள்ளைகளும்  சதமல்ல

சீரும்  சதமல்ல
செல்வம்  சதமல்ல
தேசத்திலே  யாரும்  சதமல்ல
நின் தாள்  சதம்
கச்சி  ஏகம்பனே !!

அன்னை  எத்தனை  எத்தனை  அன்னையோ
அப்பன் எத்தனை  எத்தனை அப்பனோ
பின்னை  எத்தனை தெத்தனை  பெண்டிரோ
பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ
முன்னை  எத்தனை எத்தனை  சன்மமோ
மூடனாய்  அடியேனும்  அறிந்திலேன்
இன்னும்  எத்தனை  எத்தனை   சன்மமோ
என்செய்வேன்  கச்சி  ஏகம்பனே !!

பிறவாததிருக்க  வரம் பெறல்  வேணடும்
பிறந்துவிட்டால்
இறவாதிருக்க  மருந்துண்டு  காண்
 இது எப்படியோ
அறமார் புகழ்த் தில்லை
அம்பலவாணர் அடிக்கமலம்
மறவாதிரு  மனமே!
அது காண்  மருந்துனக்கே !!

விட்டுவிடப் போகுது  உயிர்
விட்ட உடனே  உடலை
சுட்டுவிட போகின்றார்  சுற்றத்தார்
பட்டது பட்டு  எந்நேரமும்
சிவனை  ஏத்துங்கள் ,  போற்றுங்கள்
சொன்னேன்,  அதுவே  சுகம்.

காலன்  வரம் முன்னே
கண் பஞ்சடை முன்னே
பாலுன்  கடைவாய்  படுமுன்னே
மேல் விழுந்தே உற்றார்  அழுமுன்னே
ஊரார் சுடுமுன்னே
குற்றாலத்தானையே  கூறு .

இருப்பது பொய்
போவது  மெய்  என்றெண்ணி
நெஞ்சே
ஒருத்தருக்கு
தீங்கினை உன்னாதே
பருத்த  தொந்தி  நம்மதென்று  நாமிருக்க
நாய்  நரிகள்  பேய்  கழுகு
தம்மதென்று   தாமிருக்கும்  தான்.

உன்னைத்  துதியேனோ
ஊர் நாடி  வாரேனோ
பொன்னடியைப்  பாரேனோ
பூரித்து  நில்லேனோ
ஓங்காரப் பொற்சிலம்பின்  உல்லாசம்  பாரேனோ
பாங்கான  தண்டை  பல  அணியும்  பாரேனோ
வீர  கண்டாமணியின்  வெற்றிதனைப்  பாரேனோ
சூரர் கண்டு போற்றும்  அந்தச் சுந்தரத்தைப் பாரேனோ
இடையில்  புலித்தோல்  இருந்த நலம்  பாரேனோ
விடையில்  எழுந்தருளும்  வெற்றியினைப் பாரேனோ









Tuesday, 18 March 2014

பட்டினத்தார்  பாடல்கள் 

கல்லாப்  பிழையும் ,
கருதாப் பிழையும் ,

கசிந்துருகி 
நில்லாப் பிழையும் ,

நின்  அஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையும் ,
துதியாப்  பிழையும்,
தொழாப்  பிழையும் ,

எல்லாப்  பிழையும் ,
பொறுத்தருள்வாய் 
கச்சி  ஏகம்பனே !!