Friday, 28 March 2014

பாம்பாட்டி  சித்தர்

குற்றமற்ற  சிவனுக்கு  குண்டலம்  ஆனாய்
கூறும்  திருமாலுக்கு குடையானாய்
கற்றைக் குழல்  பார்வதிக்கு  கங்கணமானாய்
கரவாமல்  உளம் களிந்தாடு  பாம்பே !

மண்டலத்தைத்  தாங்கும் மிக வல்லமை  கொண்டாய்
மாயனுக்கு  படுக்கைக்கு  வண்ணப்  பாயானாய்
கண்ட  படை  நடுங்கிட  காட்சியும்  பெற்றாய்
கண்ணே  செவியாகக் கொண்டாய்  ஆடு  பாம்பே  !

இருவர்  மண்  சேர்த்திட  ஒருவர்  பண்ண
ஈரைந்து  மாதமாய்  வைத்த சூளை
அருமையாய் இருப்பினும்  அந்த  சூளை
அரைக்காசுக்கு  ஆகாது என்று  ஆடாய்  பாம்பே !

ஆசையென்னும்  செருப்பின்மேல்  அடியை வைத்தே
ஆங்கார  முட்காட்டை  அறவே  மிதித்தே
காசை எனும்  துர்க்குணத்தில்  கனலைக்  கொளுத்தி
காலாகாலம்  கடந்தோம்  என்று  ஆடாய்  பாம்பே  !


இடைக்காட்டுச்  சித்தர்  பாடல்
நாராயணக்  கோனார்  கூற்று

கண்ணுள்  கருமணியை,
கற்பகத்தை,
காஞ்சனத்தை ,
பெண்ணுருவப்  பாதியனை,
பேரின்பப்   முப்பொருளை,
விண்ணின்  அமுதை,
விளக்கொளியை,
வெங்கதிரை,
தண்ணளியை.
உள்ளில்  வைத்து
சாரூபம்  சாருவனே  !


No comments:

Post a Comment