Saturday, 25 October 2014

திருமூலர் - சராசரமும் ஆடுதையா !

சராசரமும்  ஆடுதையா !!





தத்துவம்  ஆடச்
சதாசிவம்  தானாடச்

சித்தமும்  ஆடச்
சிவசக்தி தானாட

வைத்த  சராசரம்  ஆட
மறையாட

அத்தனும்  ஆடினான் ,
ஆனந்தக்  கூத்தே  !


---  திரு மூலர்

திருநாவுக்கரசர் - எல்லாம் கடவுள் செயல்




எல்லாம் கடவுள் செயலே என்பதை ஒரு 
திருத்தாண்டகப் பாட்டில் 
மிக அழகாகப் 
பாடியுள்ளார் திருநாவுக்கரசர். 
 
ஆட்டுவித்தால் ஆர்ஒருவர் ஆடா தாரே 
அடக்குவித்தால் ஆர்ஒருவர் அடங்கா தாரே 
ஓட்டுவித்தால் ஆர்ஒருவர் ஓடா தாரே 
உருகுவித்தால் ஆர்ஒருவர் உருகா தாரே 
பாட்டுவித்தால் ஆர்ஒருவர் பாடா தாரே 
பணிவித்தால் ஆர்ஒருவர் பணியா தாரே 
காட்டுவித்தால் ஆர்ஒருவர் காணா தாரே 
காண்பார்ஆர் கண்ணுதலாய் காட்டாக் காலே. 


( தனித்திருத்தாண்டகம், 7175)