Tuesday, 13 May 2014

பாம்பாட்டி சித்தர் - சாதிப் பிரிவு

சாதிப்  பிரிவு 



சாதிப் பிரிவு  பற்றிய  பாம்பாட்டி  சித்தரின்  பாடல் .


சாதிப் பிரிவினிலே  தீயை  மூட்டுவோம் !
          சந்தை வெளியினிலே  கோலை  நாட்டுவோம் !
வீதிப் பிரிவினிலே  விளையாடிடுவோம் !
          வேண்டாத  மனையினில்  உறவு  செய்வோம் !
சோதித்து  உலாவியே  தூங்கி விடுவோம் !
           சுகமான  பெண்ணையே  சுகித்திருப்போம் !
ஆதிப்  பிரமர்கள்  ஐந்து பேரும் 
           அறியார்களிதை  என்று ஆடாய்  பாம்பே ! 


பெரிய  ஞானக்கோவை   என்ற  நூலில் இருந்து. 




பட்டினத்தார் - பூரண மாலை ( 4 )

பட்டினத்தார்  பாடல்கள்  

பூரண  மாலை 




வாசிதனைப்  பார்த்து  மகிழ்ந்து 
           உனைத்தான்  போற்றாமல் 
காசிவரை  போய்  திரிந்து 
           கால்  அலுத்தேன் ......                 பூரணமே   !           21

கருவிகள்  தொன்னூற்றாறில் 
           கலந்து   விளையாடினதை 
இருவிழியால்   பாராமல் 
            ஈடழிந்தேன்    ................              பூரணமே   !           22 

உடலுக்குள்  நீதி  
             நின்று  உலாவிதனைக் காணாமல் 
கடல் மலை  தோறும் திரிந்து 
             கால்  அலுத்தேன்    ........          பூரணமே   !           23

எத்தேச  காலமும்  
              நாம்  இறவாது  இருப்போம் என்று 
உற்று  உனைத்தான்  பாராமல் 
               உருவழிந்தேன் ........                பூரணமே   !           24

எத்தனை  தாய் தந்தை 
                இவர்களிடத்தே இருந்து 
பித்தனாய்  யானும் 
                பிறந்து  இறந்தேன் .......         பூரணமே   !           25


பெற்று அலுத்தார்   தாயார் 
               பிறந்தலுத்தேன்  நானும், உந்தன் 
பொற்றுணைத்தாள்  தந்து 
               புகழ் அருள்வாய்  .......               பூரணமே   !            26

உற்றார்  அழுது  அலுத்தார் 
               உறன்முறையார்  சுட்டு  அலுத்தார் 
பெற்று  அலுத்தார்  தாயார் 
               பிறந்து  அலுத்தேன் ..........       பூரணமே   !            27

பிரமன்  படைத்து அலுத்தான் 
               பிறந்து இறந்து நான் அலுத்தேன் 
உரமுடைய  அக்கினிதான் 
               உண்டு  அலுத்தான்  ............    பூரணமே   !            28

எண்பத்து  நானூறு ஆயிரம் 
              செனனமும்  செனித்து 
புண்பட்டு  நானும் 
               புலம்பினேன் ..............                 பூரணமே   !           29

என்னை  அறியாமல்  
                எனக்குள்ளே  நீ இருக்க 
உன்னை  அறியாமல்  
                 உடல்  அழிந்தேன்  ..........       பூரணமே   !          30



தொடரும் ........



Wednesday, 7 May 2014

பட்டினத்தார் - பூரண மாலை ( 3 )

பட்டினத்தார்  பாடல்கள் 

பூரண  மாலை 







ஊனுக்குள்  நீ 
          நின்று உலாவினதைக்  காணாமல் 
நானென்று  இருந்து 
          நலம் இழந்தேன்    பூரணமே  !               11

மெய்வாழ்வை  நம்பி 
         விரும்பி மிக  வாழாமல் ,
பொய் வாழ்வை  நம்பிப் 
         புலம்பினேன்     பூரணமே  !                     12

பெண்டுபிள்ளை  தந்தைதாய் 
         பிறவியுடன்  சுற்றம்  இவை 
உண்டென்று  நம்பி  
          உடலழிந்தேன்    பூரணமே  !                  13

இந்த உடல்   உயிரை 
          எப்போதும்தான்  சதமாய் 
பந்தமுற்று  நானும் 
         பதமிழ்ந்தேன்    பூரணமே   !                     14

தண்டிகை  பல்லக்குடனே 
         சகலமும் பந்துக்களும் 
உண்டென்று  நம்பி  
          உணர்விழந்தேன்  பூரணமே  !                15

மாதர்  பிரபஞ்ச 
          மயக்கத்திலே  விழுந்து 
போத  மயங்கி 
          பொறியழிந்தேன்  பூரணமே  !                16     

சரியை கிரியா யோகந்தான் 
         ஞானம்  பாராமல் 
பரிதி கண்ட மதியதுபோல் 
         பயனழிந்தேன்  பூரணமே  !                       17

மண் பெண்  பொன்னாசை 
         மயக்கத்திலே  விழுந்து 
கண்கெட்ட  மாடாது போல் 
         கலங்கினேன்   பூரணமே  !                        18

தனிமுதலைப்  பார்த்து 
          தனித்திருந்து  வாழாமல் 
அனியாயமாய்  பிறந்திங்கு 
         அலைந்துநின்றேன்  பூரணமே  !            19

ஈராறு  தன் கலைக்குள் 
         இருந்து  கூத்தாடினதை 
ஆராய்ந்து  பாராமல்  
          அறிவிழந்தேன்  பூரணமே  !                    20


தொடரும் .....