Wednesday, 7 May 2014

பட்டினத்தார் - பூரண மாலை ( 3 )

பட்டினத்தார்  பாடல்கள் 

பூரண  மாலை 







ஊனுக்குள்  நீ 
          நின்று உலாவினதைக்  காணாமல் 
நானென்று  இருந்து 
          நலம் இழந்தேன்    பூரணமே  !               11

மெய்வாழ்வை  நம்பி 
         விரும்பி மிக  வாழாமல் ,
பொய் வாழ்வை  நம்பிப் 
         புலம்பினேன்     பூரணமே  !                     12

பெண்டுபிள்ளை  தந்தைதாய் 
         பிறவியுடன்  சுற்றம்  இவை 
உண்டென்று  நம்பி  
          உடலழிந்தேன்    பூரணமே  !                  13

இந்த உடல்   உயிரை 
          எப்போதும்தான்  சதமாய் 
பந்தமுற்று  நானும் 
         பதமிழ்ந்தேன்    பூரணமே   !                     14

தண்டிகை  பல்லக்குடனே 
         சகலமும் பந்துக்களும் 
உண்டென்று  நம்பி  
          உணர்விழந்தேன்  பூரணமே  !                15

மாதர்  பிரபஞ்ச 
          மயக்கத்திலே  விழுந்து 
போத  மயங்கி 
          பொறியழிந்தேன்  பூரணமே  !                16     

சரியை கிரியா யோகந்தான் 
         ஞானம்  பாராமல் 
பரிதி கண்ட மதியதுபோல் 
         பயனழிந்தேன்  பூரணமே  !                       17

மண் பெண்  பொன்னாசை 
         மயக்கத்திலே  விழுந்து 
கண்கெட்ட  மாடாது போல் 
         கலங்கினேன்   பூரணமே  !                        18

தனிமுதலைப்  பார்த்து 
          தனித்திருந்து  வாழாமல் 
அனியாயமாய்  பிறந்திங்கு 
         அலைந்துநின்றேன்  பூரணமே  !            19

ஈராறு  தன் கலைக்குள் 
         இருந்து  கூத்தாடினதை 
ஆராய்ந்து  பாராமல்  
          அறிவிழந்தேன்  பூரணமே  !                    20


தொடரும் .....





No comments:

Post a Comment