Friday, 22 May 2020

பட்டினத்தார் - பூரண மாலை ( 8 )

பட்டினத்தார்  பாடல்கள் 

பூரண மாலை ( 8 ) 



உருப் பேதமின்றி 
   உயர்ந்த சப்த பேதமாய்க்
குருப் பேதமாய் வந்த 
   குணம் அறியேன் .....................................  பூரணமே !   71

சட் சமய பேதங்கள் 
   தான் வகுத்துப் பின்னுமொரு
உட் சமயம் உண்டென்று
   உரைத்தனையே ........................................பூரணமே !   72

முப்பத்து இரண்டு உறுப்பாய் 
   நுனைந்து படைத்து உள்ளிருந்த
செப்படி வித்தைத் 
   திறமறியேன் ............................................  பூரணமே !   73

என்னதான்  கற்றாலென் ?
   எப்பொருமும் பெற்றாலென் ?
உன்னை அறியாதார்
   உய்வாரோ ?  ............................................ பூரணமே !   74

கற்றறிவோம்  என்பார் 
   காணார்கள்  உன் பதத்தை ! 
பெற்றறியார் தங்களுக்கு 
   பிறப்பறுமோ ........................................     பூரணமே !  75

வான் என்பார் அண்டமென்பார்
    வாய் ஞானமே பேசி 
தான் என்பார் வீணர்
   தனை அறியார்..... ................................    பூரணமே !   76

ஆதி என்பார்  அந்தமென்பார் 
   அதற்குள் நடுவாயிருந்த 
சோதி என்பார் நாதத்
தொழில் அறியார் ....................................   பூரணமே !   77

மூச்சென்பார் உள்ளமென்பார்
   மோனமெனும் மோட்சமென்பார்
பேச்சென்பார் உன்னுடைய 
    பேரறியார்  ...............................................  பூரணமே !   78

பரமென்பார்  பானுவென்பார் 
    பாழ்வெளியாய் நின்ற 
வரமென்பார்  உந்தன்
    வழியறியார்  ...................................           பூரணமே !  79

எத்தனை பேரோ எடுத்தெடுத்து
   தான் உரைத்தார்
அத்தனைப் பேர்க்கு ஒன்றானது
   அறிகிலேன்  .....................................          பூரணமே !  80 




தொடரும் ..........
 

No comments:

Post a Comment