பட்டினத்தார் பாடல்கள்
பூரண மாலை
மூலவித்தாய் நின்று முளைத்து
உடல்தோறும் இருந்து
காலன் என வழிக்கும்
கணக்கறியேன்...................பூரணமே ! 46
உள்ளும் புறம்புமாய்
உடலுக்குள் நீயிருந்தது
எள்ளளவும் நான் அறியாது
இருந்தேனே.....................பூரணமே ! 47
தாயாகித் தந்தையாய்
தமர் கிளைஞர் சுற்றமெல்லாம்
நீயாகி நின்ற
நிலை அறியேன் ..............பூரணமே ! 48
விலங்கு புள் ஊர்வன அசரம்
விண்ணவர் நீற்ச் சாதி மனு
குலங்கள் எழுவகைல் நின்ற
குறிப்பறியேன்....................பூரணமே ! 49
ஆணாகிப் பெண்ணாய்
அலியாய் வேற்றுருவாய்
மாணாகி நின்ற
வகை அறியேன் ...................பூரணமே ! 50
வாலையாய்ப் பக்குவமாய்
வளர்ந்து கிழந்தானாகும்
பாலையாய் நின்ற
பயனறியேன்........................பூரணமே ! 51
பொய்யாய்ப் புவியாய்
புகழ் வாரிதியாகி
மெய்யாகி நின்ற
வியனறியேன்.............................பூரணமே ! 52
பூவாய் மனமாகிப்
பொன்னாகி மாற்றாகி
நாவாய்ச் சொல்லான
நயமறியேன் .............................பூரணமே ! 53
முதலாய் நடுவாகி
முப்பொருளாய் மூன்றுலகாய்
இதமாகி நின்ற
இயலறியேன்........................பூரணமே ! 54
ஊணாய் உடலுயிராய்
உண்ணிநிறைந்த கண்ணொளியாய்
தேனாய் ருசியான
திறனறியேன் ..........................பூரணமே ! 55
வித்தாய் மரமாய்
விளைந்த கனியாய் பூவாய்
சித்தாகி நின்ற
திறமறியேன் ...........................பூரணமே ! 56
ஐவகையும் பெற்று உலக
அண்ட பகிரண்டமெல்லாம்
தெய்வமென நின்ற
திறமறியேன்..........................பூரணமே .....57
மனமாய் கனவாகி
மாயையாய் உள்ளிருந்து
நினைவாகி நின்ற
நிலையறியேன் ......................பூரணமே .. 58
சக்தி சிவம் இரண்டாய்
தான் முடிவில் ஒன்றாகி
சித்திரமாய் நின்ற
திறமறியேன் ..........................பூரணமே ! 59
பொறியாய்ப் புலனாகிப்
பூத பேதப் பிரிவாய்
அறிவாகி நின்ற
அளவறியேன் .........................பூரணமே ! 60
( தொடரும் )
பூரண மாலை
மூலவித்தாய் நின்று முளைத்து
உடல்தோறும் இருந்து
காலன் என வழிக்கும்
கணக்கறியேன்...................பூரணமே ! 46
உள்ளும் புறம்புமாய்
உடலுக்குள் நீயிருந்தது
எள்ளளவும் நான் அறியாது
இருந்தேனே.....................பூரணமே ! 47
தாயாகித் தந்தையாய்
தமர் கிளைஞர் சுற்றமெல்லாம்
நீயாகி நின்ற
நிலை அறியேன் ..............பூரணமே ! 48
விலங்கு புள் ஊர்வன அசரம்
விண்ணவர் நீற்ச் சாதி மனு
குலங்கள் எழுவகைல் நின்ற
குறிப்பறியேன்....................பூரணமே ! 49
ஆணாகிப் பெண்ணாய்
அலியாய் வேற்றுருவாய்
மாணாகி நின்ற
வகை அறியேன் ...................பூரணமே ! 50
வாலையாய்ப் பக்குவமாய்
வளர்ந்து கிழந்தானாகும்
பாலையாய் நின்ற
பயனறியேன்........................பூரணமே ! 51
பொய்யாய்ப் புவியாய்
புகழ் வாரிதியாகி
மெய்யாகி நின்ற
வியனறியேன்.............................பூரணமே ! 52
பூவாய் மனமாகிப்
பொன்னாகி மாற்றாகி
நாவாய்ச் சொல்லான
நயமறியேன் .............................பூரணமே ! 53
முதலாய் நடுவாகி
முப்பொருளாய் மூன்றுலகாய்
இதமாகி நின்ற
இயலறியேன்........................பூரணமே ! 54
ஊணாய் உடலுயிராய்
உண்ணிநிறைந்த கண்ணொளியாய்
தேனாய் ருசியான
திறனறியேன் ..........................பூரணமே ! 55
வித்தாய் மரமாய்
விளைந்த கனியாய் பூவாய்
சித்தாகி நின்ற
திறமறியேன் ...........................பூரணமே ! 56
ஐவகையும் பெற்று உலக
அண்ட பகிரண்டமெல்லாம்
தெய்வமென நின்ற
திறமறியேன்..........................பூரணமே .....57
மனமாய் கனவாகி
மாயையாய் உள்ளிருந்து
நினைவாகி நின்ற
நிலையறியேன் ......................பூரணமே .. 58
சக்தி சிவம் இரண்டாய்
தான் முடிவில் ஒன்றாகி
சித்திரமாய் நின்ற
திறமறியேன் ..........................பூரணமே ! 59
பொறியாய்ப் புலனாகிப்
பூத பேதப் பிரிவாய்
அறிவாகி நின்ற
அளவறியேன் .........................பூரணமே ! 60
( தொடரும் )


No comments:
Post a Comment