பட்டினத்தார் பாடல்கள்
பூரணமாலை ( 10 )
பூசையுடன் புவன
போகமெனும் போக்கியத்தால்
ஆசையுற்றே நானும்
அறிவழிந்தேன் .................... பூரணமே ! 91
படைத்தும் அழித்திடுவாய்
பார்க்கில் பிரமா எழுத்தைத்
துடைத்துச் சிரஞ்சீயாய்த்
துலங்குவிப்பாய்................... பூரணமே ! 92
மந்திரமாய்ச் சாத்திரமாய்
மறை நான்காய் நீயிருந்த
தந்திரத்தை நானறியத்
தகுமோதான் ......................... பூரணமே ! 93
அல்லாய்ப் பகலாய்
அனவரத காலமெனும்
சொல்லாய்ப் பகுத்த
தொடர்பறியேன் .............. பூரணமே ! 94
நரகம் சுவர்கமென
நண்ணும் இயரண்டு உண்டாயும்
அரகரா என்பது
அறிகிலேன் ........................... பூரணமே ! 95
பாவ புண்ணியனென்னும்
பகுப்பாய் படைத்திங்கு
ஆவலை உண்டாக்கி வைத்த
அருளறியேன் ...................... பூரணமே ! 96
சாந்தமென்றும் கோபமென்றும்
சாதி பேதங்களென்றும்
பாந்தாமென்றும் புத்தியென்றும்
படைத்தனையே ................. பூரணமே ! 97
பாசம் உடலாய்
பசு அதுவும் தானுயிராய்
நேசமுடன் நீ பொருளாய்
நின்றனையே ..................... பூரணமே ! 98
ஏதிலடியார் இங்கு
இயக்கத்தினில் வந்துன்றன்
பாதமதில் தாழப்
பரிந்தருள்வாய் ................. பூரணமே ! 99
நானே நீ நீயே நான்
நாமிரண்டும் ஒன்றானால்
தேனின் ருசியதுபோல்
தெவிட்டாய் நீ .................... பூரணமே ! 100
முடிவில் ஒரு சூனியத்தை
முடித்து நின்று பாராமல்
அடியில் ஒரு சூனியத்தில்
அலைந்தேனே .............. பூரணமே ! 101
பூரண மாலை தன்னைப்
புத்தியுடன் ஓதினோர்க்குத்
தாரணியில் ஞானம்
தழைப்பிபாய் ....................... பூரணமே ! 102
பூரண மாலை முற்றிற்று !
ஹரி ஓம் !!!
பூரணமாலை ( 10 )
பூசையுடன் புவன
போகமெனும் போக்கியத்தால்
ஆசையுற்றே நானும்
அறிவழிந்தேன் .................... பூரணமே ! 91
படைத்தும் அழித்திடுவாய்
பார்க்கில் பிரமா எழுத்தைத்
துடைத்துச் சிரஞ்சீயாய்த்
துலங்குவிப்பாய்................... பூரணமே ! 92
மந்திரமாய்ச் சாத்திரமாய்
மறை நான்காய் நீயிருந்த
தந்திரத்தை நானறியத்
தகுமோதான் ......................... பூரணமே ! 93
அல்லாய்ப் பகலாய்
அனவரத காலமெனும்
சொல்லாய்ப் பகுத்த
தொடர்பறியேன் .............. பூரணமே ! 94
நரகம் சுவர்கமென
நண்ணும் இயரண்டு உண்டாயும்
அரகரா என்பது
அறிகிலேன் ........................... பூரணமே ! 95
பாவ புண்ணியனென்னும்
பகுப்பாய் படைத்திங்கு
ஆவலை உண்டாக்கி வைத்த
அருளறியேன் ...................... பூரணமே ! 96
சாந்தமென்றும் கோபமென்றும்
சாதி பேதங்களென்றும்
பாந்தாமென்றும் புத்தியென்றும்
படைத்தனையே ................. பூரணமே ! 97
பாசம் உடலாய்
பசு அதுவும் தானுயிராய்
நேசமுடன் நீ பொருளாய்
நின்றனையே ..................... பூரணமே ! 98
ஏதிலடியார் இங்கு
இயக்கத்தினில் வந்துன்றன்
பாதமதில் தாழப்
பரிந்தருள்வாய் ................. பூரணமே ! 99
நானே நீ நீயே நான்
நாமிரண்டும் ஒன்றானால்
தேனின் ருசியதுபோல்
தெவிட்டாய் நீ .................... பூரணமே ! 100
முடிவில் ஒரு சூனியத்தை
முடித்து நின்று பாராமல்
அடியில் ஒரு சூனியத்தில்
அலைந்தேனே .............. பூரணமே ! 101
பூரண மாலை தன்னைப்
புத்தியுடன் ஓதினோர்க்குத்
தாரணியில் ஞானம்
தழைப்பிபாய் ....................... பூரணமே ! 102
பூரண மாலை முற்றிற்று !
ஹரி ஓம் !!!


No comments:
Post a Comment