பட்டினத்தார் பாடல்கள்
பூரண மாலை
வானில் கதிர்மதியாய் வளர்ந்து
பின் ஒன்றானது போல்
ஊன் உடலுக்குள் இருந்த
உயிர்ப்பு அறியேன்......................பூரணமே ! 61
பொய்யும் புலையும் மிகப் பொருந்தி
வீண் பேசல் அன்றி
ஐயோ உனை உறைக்க
அறிகிலேன் ..................................பூரணமே ! 62
நிரந்தரமாய் என்றும்
நின்று விளையாடினதைப்
பரம் அதுவே என்னப்
பதமறியேன் ...................................பூரணமே ! 63
கொல்வாய் பிறப்பிப்பாய்
கூட இருந்தே சுகிப்பாய்
செல்வாய் பிறர்க்குள்
செயல் அறியேன் .........................பூரணமே ! 64
வாரிதியாய் வையமெல்லாம் மன்னும்
அண்ட பிண்டமெல்லாம்
சாரதியாய் நின்ற
தலமறியேன் ................................பூரணமே ! 65
வித்தாய் மரமாய்
வெளியாய் ஒளியாய்
நீ சத்தாயிருந்த
தரமறியேன் ................................ பூரணமே ! 66
தத்துவத்தைப் பார்த்து மிக
தன்னை ஐந்தறிவால்
உய்த்து உனைத்தான் பாராமல்
உய்வாரோ ................................... பூரணமே ! 67
ஒன்றாய் உயிராய்
உடல்தோறும் நீ இருந்தும்
என்றும் அறியார்கள்
ஏழைகள்தாம் .................................. பூரணமே ! 68
நேற்றென்றும் நாளை என்றும்
நினைப்பு மறைப்பாய் படைத்து
மாற்றமாய் நின்ற
வளமறியேன் ............................... பூரணமே ! 69
மனம் சித்தி சித்தம்
மகிழ்வறிவு ஆங்காரமதாய்
நினவாம் தலமான
நிலை அறியேன் ........................ பூரணமே ! 70
தொடரும் ......


No comments:
Post a Comment