Tuesday, 19 May 2020

பட்டினதார் - பூரண மாலை ( 5 )

பட்டினத்தார்  பாடல்கள்  

பூரண  மாலை 

கருவாய் உருவாய்க் கலந்து
          உலகெலாம்  நீயாய்
அருவாகி நின்றது 
         அறிகிலேன்           .............  பூரணமே !  31

செம்பொற் கமலத் திருவடியைப் 
            போற்றாமல்
பம்பை கொட்டா ஆடும் 
           பிசாசானேன்         ............. பூரணமே !    32

எனக்குள்ளே  நீயிருக்க
       உனக்குள்ளே நானிருக்க 
மனக் கவலைத் தீர
      வரம் அருள்வாய்      ............. பூரணமே     33

எழுவகைத் தோற்றத்தில்
      இருந்து விளையாடினதைப்
பழுதறவே  பாராமல்
     பயன் அழிந்தேன்     ............... பூரணமே !    34

சாதி பேதங்கள் தமை
      அறிய மாட்டாமல்
வாதனையால் நின்று 
       மயங்கினேன்              ............... பூரணமே !     35

குலம் ஒன்றாய் நீ படைத்த
     குறையை அறியாமல் யான்
மல பாண்டத்துள் இருந்து
      மயங்கினேன்      .......................  பூரணமே !     36

அண்ட பிண்டமெல்லாம் 
      அணுவுக்கு அணுவாய் 
 நீ கொண்ட வடிவின் 
      குறிப்பறியேன்     ..................  பூரணமே  !!     37

சகத்திரத்தின் மேலிருக்கும் 
      சற்குருவைப் போற்றாமல்
அகத்தினுடை ஆணவத்தால்
      அறிவிழந்தேன் ....................... பூரணமே !     38

ஐந்து பொறியை அடக்கி
     உனைப் போற்றாமல்
நைந்துருகி நிஞ்சம் 
    நடுங்கினேன்      ...........................பூரணமே !   39

என்னைத் திருக்கூத்தால் 
      இப்படி நீ ஆட்டுவித்தாய் 
உன்னை அறியாது
     உடல் அழிந்தேன்.....................பூரணமே !   40

நரம்புதசை தோல் எலும்பு
    நாற்றத்துக்குள் இருந்து
வரம்பறிய மாட்டாமல்
   மயங்கினேன்.............................பூரணமே !    41

சிலந்தியுடை  நூல் போல்
    சீவசெந்துக்குள் இருந்த
நலந்தனைப் பாராமல் 
    நலமிழந்தேன்    .....................பூரணமே !    42

குருவாய்ப் பரமாகிக் 
    குடிலை சத்தி நாதவிந்தாய் 
அருவாய் உருவானது
    அறிகிலேன்     ..........................  பூரணமே .. 43

ஒளியாய்க் கதிர்மதியாய்
    உள்ளிருவாய் அக்கினியாய்
வெளியாகி நின்ற
    வியன் அறியேன்........................பூரணமே !  44

இடையாகிப் பிங்கலையாய்
     எழுந்தசுழுமுனையாய்
உடலுயிராய் நீயிருந்த 
உளவறியேன்.......................................பூரணமே !  45

( தொடரும் ) 

No comments:

Post a Comment