பட்டினத்தார் பாடல்கள்
பூரண மாலை ( 9 )
நகாரம் மகாரம் என்பார்
நடுவே சிகாரம் என்பார்
வகாரம் யகாரம் என்பார்
வகையறியார் ................... பூரணமே ! 81
மகத்துவமாய் காம
மயக்கத்துக்குள் இருந்து
பகுத்தறிய மாட்டாமல்
பயன் அழிந்தேன் .................பூரணமே ! 82
உண்மைப் பொருளை
உகத்திருந்து பாராமல்
பெண் மயக்கத்தாலே
பிறந்து இறந்தேன் ..................பூரணமே ! 83
வாயார வாழ்த்தி
மகிழ்ந்து உனைத்தான் போற்றாமல்
அந்தரமாய் நின்று
அலைந்தேன் ........................ பூரணமே ! 84
சந்திரனை மேகமதுதான்
மறைத்த வாறதுபோல்
பந்தமுடன் யானும் உனைப்
பார்க்கிலேன் ............................ பூரணமே ! 85
செந்தாமரைத் தாளை
தினந்தினமும் போற்றாமல்
அந்தரமாய் நின்று அங்கு
அலைந்தேன் ...................... பூரணமே ! 86
நீர்மேல் குமிழிபோல்
நிலையற்ற காயமிதை
தாரகம் என்று எண்ணி நான்
தட்டழிந்தேன் .................... பூரணமே ! 87
நெஞ்சம் உருகி நினைந்து
உனைத்தான் போற்றி
நெடு வஞ்சகத்தைப் போக்க
வகை அறியேன் .................... பூரணமே ! 88
எள்ளுக்குள் எண்ணெய் போல்
எங்கும் நிறைந்திருந்தது
உள்ளம் அறியாது
உருகினேன் ....................... பூரணமே ! 89
மாயாப் பிரபஞ்ச
மயக்கத்திலே விழுந்த
ஓயாச் ச(ஜ)னனம்
ஒழித்திலேன் ................. பூரணமே ! 90
தொடரும் !!


No comments:
Post a Comment