Saturday, 13 June 2020

பட்டினத்தார் - முதல்வன் முறையீடு ( 13 )

பட்டினத்தார் பாடல்கள் 

முதல்வன் முறையீடு ( 13 )



ஆனை உரி போர்த்த 
அழகுதனைப் பாரேனோ....
மானைப் பிடித்து ஏந்தும்
மலர்க்கரத்தைப் பாரேனோ ... ??

மாண்டார் தலை பூண்ட
மார்பழகைப் பாரேனோ....
ஆண்டார் நமகென்று
அறைந்து திரியேனோ ...??

கண்டம் கறுத்து நின்ற 
காரணத்தைப் பாரேனோ ....
தொண்டர் குழுவில் நின்ற
தோற்றமதைப் பாரேனோ ...??

அருள்பழுத்த மாமதியாம்
ஆனனத்தைப் பாரேனோ....
திருநயனச் சடை ஒளிரும்
செங்கொழுமைப் பாரேனோ....??

கன்னி வன நாதா.........
கன்னி வன நாதா...........


இன்னும் வரும் ......

No comments:

Post a Comment