Wednesday, 17 June 2020

பட்டினத்தார் - முதல்வன் முறையீடு ( 17 )

பட்டினத்தார் பாடல்கள் 

முதல்வன் முறையீடு ( 17 )



வாக்கிறந்து நின்ற 
மவுனமது கிட்டாதோ....
தாக்கிறந்து நிற்கும் அந்த
தற் சுத்தி கிட்டாதோ   .......  ??

வெந்துயரைத் தீர்க்கும் அந்த
வெட்டவெளி கிட்டாதோ .....
சிந்தை ஐயம் தீர்க்கும் அந்த
தேறல் அது கிட்டாதோ ... ??

ஆன அடியார்க்கு
அடிமைகொளக் கிட்டாதோ ....
ஊனமற என்னை
உணர்த்துவித்தல் கிட்டாதோ ... ??

என்னென்று சொல்லுவண்டா...
என் குருவே ..  கேளேடா... 
பிள்ளை...
எனக்கு நீ அல்லால் பிறிதிலையே .... !!

கன்னி வன நாதா ..........
கன்னி வன நாதா .........

முறையீடு   தொடரும் ....






No comments:

Post a Comment