நீ முன்னாலே போன
நான் பின்னாலே வாரேன்
நான் பின்னாலே வாரேன்
யார் பின்னால் போக வேண்டும்,
யாருக்கு வழிவிட்டு ஒதுங்கி நிற்க
வேண்டும் என்று சாஸ்திரம் சில
விதிகளைச் சொல்லியிருக்கிறது.
* பஞ்சமகா யக்ஞம் எனப்படும் ஐந்து
வகை யாகங்களை தவறாமல் செய்யும்
ஒரு வேதியர் வந்தால் அவருக்கு வழிவிட்டு
பின்னால் செல்ல வேண்டும்.
* கர்ப்பவதி வந்தால் அவளுக்கு
வழிவிட்டு பின்னால் போ.
* பசுக்கள் பின்னால் வந்தால்,
அதற்கு வழிவிட்டு பின்னால் போ.
* யானை பின்னால் வந்தால்,
அதை முதலில் விட்டு பின்னால் நட.
* தலையில் கனமான பொருளை
எடுத்துக் கொண்டு ஒருவர் பின்னால்
வந்தால், அவருக்கு வழிவிட்டு
தொடர்ந்து செல்.
இவற்றில் பசுக்களின் பின்னால் சென்றால்,
அதன் பாததூளி (தூசு) நம் மீது பட்டு
உடல் சுத்தம், பேச்சில் சுத்தம்,
மனச்சுத்தம் ஏற்படுவதாக ஐதீகம்.
ஹரி ஓம் !
| |
No comments:
Post a Comment