Saturday, 18 April 2020

விநாயகர் காரிய சித்தி மாலை

விநாயகர் காரிய சித்தி மாலை




விநாயகர் காரிய சித்தி மாலை, 
ஓர் ஒப்பற்ற மந்திரம். இதனை 
காஷ்யப முனிவர் வடமொழியில் 
இயற்றினார். அதை கச்சியப்ப 
முனிவர் தமிழில் மொழி 
பெயர்த்தார்.
எந்தப் பணியை ஆரம்பித்தாலும் 
விநாயகரை வணங்கி 
ஆரம்பிப்பது நம் மக்களின் 
வழக்கம். எழுதுவதற்கு முன் 
குட்டியாக ஒரு பிள்ளையார் 
சுழி போட்டுவிட்டு எழுதத் 
தொடங்குவதும் பலருக்கு 
வழக்கம். விக்னமில்லாமல் 
முடிய வேண்டிய எந்த 
வேலைக்கும் விக்னேஸ்வரரின் 
அருள் கட்டாயம் வேண்டும். 
அன்றைய கடமைகள் 
என்றில்லாமல், வாழ்நாள் 
முழுவதும் மகிழ்ச்சி பொங்கவும் 
எதிர்ப்படும் பிரச்னைகளை 
எளிதாகக் கையாளவும், 
முறையாகத் திட்டமிடவும், 
அனைவரிடமும் அன்பு 
செலுத்தவும் , அனைவரது 
அன்பும் நம் மீது பரவவும், 
சுமூகமான வாழ்வை 
சந்தோஷமாக மேற்கொள்ளவும் 
இந்த விநாயகர் காரிய சித்தி 
மாலையை தினமும் ஜபிப்பது 
அவசியம் என்று 
வலியுறுத்துகிறார் காஷ்யப 
முனிவர்.
இந்த பாடல் முற்றிலும் 
தமிழிலேயே அமைந்துள்ளது. 
எளிமையானது. நேரடியானது. 
நாமே எளிதில் பொருள் புரிந்து 
கொள்ளலாம்.

காரிய சித்தி மாலை


பாடல் 1

பந்தம் அகற்றும் அநந்தகுணப் பரப்பும் எவன்பால் உதிக்குமோ
எந்த உலகும் எவனிடத்தில் ஈண்டி இருந்து கரக்குமோ
சந்தமறை ஆகமம் கலைகள் அனைத்தும் எவன்பால் தகவருமோ
அந்த இறையாம் கணபதியை அன்பு கூரத் தொழுகின்றோம்

பாடல் 2 :
உலகமுழுவதும் நீக்கமற ஒன்றாய் நிற்கும்பொருள் எவன் அவ்
உலகிற்பிறக்கும் விவகாரங்கள் உறாதமேலாம் ஒளியாவன்?
உலகம் புரியும் வினைப் பயனை ஊட்டும் களைகண் எவன் அந்த
உலக முதலைக் கணபதியை உவந்து சரணம் அடைகின்றோம். 
பாடல் 3 :

இடர்கள் முழுதும் எவனருளால் 
         எரிவீழும் பஞ்சென மாயும்
தொடரும் உயிர்கள் எவனருளால் 
     சுரர்வாழ் பதியும் உறச்செய்யும்
கடவுள் முதலோர்க்கு ஊறின்றி 
       கருமம் எவனால் முடிவுறும் அத்
தடவுமருப்புக் கணபதி பொன் 
           சரணம் அடைகின்றோம். 

பாடல் 4 :

மூர்த்தியாகித் தலமாகி முந்நீர் 
       கங்கை முதலான
தீர்த்தமாகி அறிந்தறியாத் 
     திறத்தினாலும் உயிர்க்கு நலம்
ஆர்த்திநாளும் அறியாமை அகற்றி 
        அறிவிப்பான் எவன் அப்
போர்த்த கருணைக் கணபதியைப் 
     புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.


பாடல் 5 :

செய்யும் வினையின் முதல்யாவன் 
    செய்யப்படும் அப்பொருள் யாவன்
ஐயமின்றி உளதாகும் அந்தக் 
             கருமப் பயன் யாவன்
உய்யும் வினையின் பயன் விளைவில் 
       ஊட்டி விடுப்பான் எவன் அந்தப்
பொய்யி இறையைக் கணபதியைப் 
      புரிந்து சரணம் அடைகின்றோம்

பாடல் 6 :

வேதம் அளந்தும் அறிவரிய 
    விகிர்தன் யாவன் விழுத்தகைய
வேத முடிவில் நடம் நவிலும் 
     விமலன் யாவன் விளங்குபர
நாதமுடிவில் வீற்றிருக்கும் நாதன் 
       எவன் எண்குணன் எவன் அப்
போத முதலைக் கணபதியைப் 
    புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.


பாடல் 7 :

மண்ணின் ஓர் ஐங்குணமாகி வதிவான் 
    எவன் நீரிடை நான்காய்
நண்ணி அமர்வான் எவன் தீயின் 
   மூன்றாய் நவில்வான் எவன் வளியின்
எண்ணும் இரண்டு குணமாகி இயைவான் 
       எவன் வானிடை ஒன்றாம்
அண்ணல் எவன் அக்கணபதியை 
      அன்பிற் சரணம் அடைகின்றோம். 

பாடல் 8 :

பாச அறிவில் பசுஅறிவில் 
      பற்றற்கரிய பரன்யாவன்
பாச அறிவும் பசுஅறிவும் பயிலப் 
        பணிக்கும் அவன்யாவன்
பாச அறிவும் பசுஅறிவும் 
      பாற்றி மேலாம் அறிவான
தேசன் எவன் அக்கணபதியைத் 
      திகழச் சரணம் அடைகின்றோம்.


நூற்பயன் பாடல் விளக்கம் 


இத்தோத்திரப் பாடல்களை மூன்று நாட்கள் சந்தியா நேரத்தில் யார் பாராயணம் செய்கின்றார்களோ, அவர்கள் செய்யும் நற்காரியங்களில் வெற்றி பெறுவார்கள்.
 தொடர்ந்து எட்டு நாட்களில் படித்தால் மனம் மகிழும் படியான நலம் பெறுவார்கள்.
 சதுர்த்தியன்று நற்சிரத்தையுடன் எட்டுத்தடவைகள் பாராயணம் செய்தால் அணிமா, மகிமா, லகுமா, கரிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் போன்ற (எட்டு) அஷ்டமா சித்திகளையும் பெறுவார்கள்.
மேற்கண்ட காரியசித்திமாலையை தொடர்ந்து 3 நாட்கள் சூரிய உதயத்திற்கு முன்பாகவும், சூரியன் மறைந்த பின்பும் 1 முறை பாராயணம் செய்தால் அவர்கள் செய்யும் செயல்களில் (நல்ல செயல்கள்) தோல்வி என்பதே இல்லாமல் வெற்றி கிட்டும். கெட்ட செயல்கள் செய்தால் விளைவு எதிர்மறையாகத் தான் இருக்கும்.
தொடர்ந்து 8 நாட்கள் படித்து வர மன உளைச்சல் நீங்கி நிம்மதியை பெறுவர். சக்தியின் மைந்தன் விநாயகர் உங்களின் மன துன்பங்களை அறவே நீக்குவார். மனநிம்மதியில்லாதவர்கள் இதை படித்து வந்தால் மனநிம்மதி பெறுவர் என்பது திண்ணம்.
சதுர்த்தி நாளில் நல்ல சிந்தனையுடன் 8 முறை இதை படித்து வர அட்டமாசித்திகளும் கிட்டும். தொடர்ந்து 60 நாட்கள் விடாமல் 1 முறை இதை படித்து வர அரச வசியம் உண்டாகும். தினமும் 21 முறைகள் படித்து வர குழந்தைச் செல்வம் மற்றும் கல்விச் செல்வம் கிட்டும்.


ஹரி ஓம் !!!












No comments:

Post a Comment